கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் கோலிவுட் திரையுலகை மட்டுமின்றி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த இரண்டு நிகழ்ச்சிகளால் அஜீத் தனது அதிரடி முடிவில் இருந்து பின்வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் டைட்டிலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிப்பதாக முடிவு செய்திருந்தார். ஆனால் அதற்குள் தமிழக மீடியா மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள மீடியாக்கள் ‘ஐ’ படத்தின் பிரமாண்ட பாடல் வெளியீட்டு விழா குறித்தும், அர்னால்ட் வருகை குறித்தும் செய்தி வெளியிட்டுக்கொண்டிருந்ததால், இந்த நேரத்தில் தனது படத்தின் டைட்டிலை அறிவித்தால் எடுபடாது என்று முடிவு செய்து டைட்டில் அறிவிக்கும் தேதியை ஒத்தி வைத்தார்.
‘ஐ’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா முடிந்த ஒருசில நாட்களிலேயே விஜய்யின் கத்தி பாடல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்ததால், ஊடகங்களின் பார்வை முழுவதும் விஜய் பக்கம் திரும்பியது. இரண்டு மெகா பட்ஜெட் படங்களின் பிரமாண்ட பாடல் வெளியீட்டு விழாவினால் அஜீத் தனது படத்தின் டைட்டிலை அறிவிக்காமல் மெளனம் காத்து வருவதாகவும், இந்த இரண்டு படங்களின் அலை கொஞ்சம் ஓய்ந்தவுடன் தனது படத்தின் அறிவித்துக்கொள்ளலாம் என அவர் கவுதம் மேனனிடம் ஆலோசித்த்தாகவும் கோலிவுட்டில் செய்திகள் பரவி வருகின்றன.
அஜீத் 55 படத்தின் டைட்டிலை முடிவு செய்து முறைப்படி தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து 15 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் வெளியிட முடியாமல் இருப்பதற்கு காரணம் ஷங்கரும் விஜய்யும்தான் என்பது தெரிய வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.