shadow

நடிகர் சங்கத்தின் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அஜித்

ஜல்லிக்கட்டு நடைபெற்றே ஆக வேண்டும் என்று மன உறுதியுடன் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு தமிழ்த் திரையுலகில் இருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் ஆதரவுக்குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஜனவரி 20ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நடிகர் சங்க வளாகத்தில் மௌன அறவழி போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் நாளை காலை 8மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. நாளை படப்பிடிப்பு அனைத்தும் ரத்து செய்து அனைத்து நடிகர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்த போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளவுள்ளதாக இருந்து செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் கடந்த சில ஆண்டுகளாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத அஜித், இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதால் இந்த போராட்டம் பரபரப்புடன் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply