shadow

ajith and vijayகடந்த தீபாவளி தினத்தின் விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘கத்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் ஆதரவுடன் நல்ல வசூலை குவித்துக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கோலிவுட்டின் முக்கிய பிரமுகர் ஒருவர் தனது டுவிட்டரில் ‘கத்தி’ படத்தில் விஜய்யை விட அஜீத் நடித்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் என்று பதிவு செய்துள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம் கோலிவுட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

சமீபத்தில் உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஒரு குளிர்பான நிறுவனம் ஒன்று தல அஜீத்தை அணுகி தங்களுடைய விளம்பர படத்தில் நடிக்குமாறும், அதற்கு சம்பளமாக ஒரு படத்திற்கு அவர் வாங்கும் சம்பளத்தை கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. ஆனால் அஜீத், தான் பயன்படுத்தாத ஒரு பொருளுக்கு விளம்பரம் செய்து தன்னுடைய ரசிகர்களையும், பொதுமக்களையும் ஏமாற்ற விரும்பவில்லை என்று கூறி மறுத்துவிட்டார். இரண்டு நாட்கள் மட்டுமே நடக்கும் படப்பிடிப்பிற்கு ஒரு படத்தின் சம்பளம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியும் மயங்காத அஜீத்தை தான் நினைத்து பெருமைப்பட்டதாக அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட குணத்தை இயற்கையாகவே பெற்றுள்ள அஜீத், முருகதாஸ் இயக்கிய ‘கத்தி’ படத்தில் நடித்திருந்தால் உண்மையில் மிகப்பொருத்தமாக இருந்திருக்கும் என்றும், பணத்திற்காக கோலா விளம்பரத்தில் நடித்துவிட்டு பின்னர் படத்திற்காக அந்த நிறுவனத்தை எதிர்த்து வசனம் பேசி விஜய், அந்த கேரக்டருக்கு சற்றும் பொருந்தவில்லை என்றும் அந்த பிரமுகர் கூறியுள்ளார்.

கத்தி திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்போடு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இவருடைய பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply