பாலிவுட் சூப்பர்ஸ்டார்களான ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் ஆகியோர் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் பிரபலமான நடிகர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் ‘எனக்கு தெரிந்து ஷாருக்கான், சல்மான்கானைவிட் அஜீத் மதிப்பு மிகுந்தவர்’ என்று கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் ‘தல 56′ படத்தில் வில்லனாக கபீர்சிங் நடித்து வருகிறார். முதல்நாள் படப்பிடிப்பின்போது இயக்குனர் எனது காட்சிகளை விவரித்து கொண்டிருந்தபோது, அந்த பக்கமாக தற்செயலாக வந்த அஜீத், என்னுடைய கையை பிடித்து எனக்கு வாழ்த்து கூறியதோடு, என்னை பற்றிய பாசிட்டிவ் விஷயங்களையும் ஒவ்வொன்றாக கூறினார். இவ்வளவிற்கும் அஜீத்தை நான் அப்பொழுதுதான் முதன்முதலில் பார்க்கின்றேன். அவருடைய பேசியபோது பாசிட்டிவ் வைப்ரேஷன் எனக்கு கிடைத்தது. இந்த வைப்ரேஷன் சல்மான்கான் மற்றும் ஷாருக்கானுடன் பேசிக்கொண்டிருந்தபோதுகூட எனக்கு கிடைத்ததில்லை’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய படப்பிடிப்பில் அஜீத் தனது படக்குழுவினர் அனைவருக்கும் மீன் சமைத்து பரிமாறியதாகவும், ஆனால் தனக்கு மீன் பிடிக்காது என்பதால் நான் அதை சாப்பிடவில்லை என்றும் கபீர்சிங் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.