shadow

ajithஅஜீத் நடித்த காதல் கோட்டை படத்தின் டப்பிங் நடந்தபோது அஜீத் சரியாக தமிழ் வார்த்தைகளை உச்சரிக்காததால், இயக்குனர் அகத்தியன் கடுப்பாகி அஜித்தை டப்பிங் தியேட்டரை விட்டே விரட்டி விட்டாராம். அன்றையய தினம் மிகவும் வருத்தத்துடன் டப்பிங் தியேட்டரில் இருந்து வெளியேறிய அஜீத் அன்று போட்ட ஒரு சபதம், எப்படியாவது பெரிய நடிகனாகி, அந்த டப்பிங் தியேட்டரை விலைக்கு வாங்கிவிட வேண்டும் என்பதுதான்.

நினைத்தபடியே பெரிய பெரிய வெற்றிகளை பெற்று அஜீத் அந்த டப்பிங் தியேட்டரை விலைக்கு வாங்கினார். அந்த நேரத்தில் அஜீத்தின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தியின் பெயரில்தான் அஜீத் அந்த டப்பிங் தியேட்டரை விலைக்கு வாங்கினாராம்.

பின்னர் அஜீத்துக்கும் எஸ்.எஸ்.சக்கரவர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தபோது, அஜித்தின் கனவான அந்த டப்பிங் தியேட்டரை சக்கரவர்த்தி தன் வசம் வைத்துக்கொண்டாராம்.

தன்னை விட்டுபிரிந்து சென்ற சக்கரவர்த்தி தற்போது பொருளாதார ரீதியில் நெருக்கடியில் இருப்பதை அறிந்து தற்போது வலிய சென்று உதவ முன்வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சிறுத்தை சிவா படத்தை முடித்துவிட்டு அஜீத் அடுத்து விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பை எஸ்.எஸ்.சக்கரவர்த்திக்கு கொடுத்துள்ளார் அஜீத். தனக்கு துரோகம் செய்தவர்களுக்கே நன்மை செய்யும் அஜீத், தனது பழைய நண்பர் கஷ்டப்படும்போது பார்த்து கொண்டு சும்மா இருப்பாரா? என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Leave a Reply