shadow

நடிகர் சங்கத்திற்கு அஜீத் ரூ.7.5 லட்சம் கொடுத்தது ஏன். இதுவரை வெளிவராத தகவல்
ajith money
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் மேற்பார்வையாளர் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மனாபன் அவர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் தற்போது உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈட்டுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து விஷால் கூறிய பல குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் அளித்தார்.

மேலும் தான் நடிகர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற போது பல லட்ச ரூபாய் சங்கத்திற்கு கடன் இருந்ததாகவும், தான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் ரூ.10 லட்சமும், அஜீத் ரூ.7.5 லட்சமும் கொடுத்து உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அஜீத் பணம் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும், அவர் செய்த உதவி தற்போதுதான் வெளியே தெரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் சங்கத்தின் நிலம் விற்கப்பட்டதாக விஷால் அணியினர் பொய்ப்பிரச்சாரம் செய்து வருவதாகவும், நடிகர் சங்கத்தின் நிலத்தை விற்கவில்லை என்றும் நடிகர் சங்க நிலத்தின் பத்திரம் தன்னிடம் பத்திரமாக உள்ளது என்றும் சரத்குமார் கூறியுள்ளார்.

Leave a Reply