shadow

ajith and gauthamபிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த  திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில்  கிளைமாக்ஸ் காட்சி படமெடுப்பது குறித்து அஜீத்துக்கும் கவும்தம் மேனனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் நேற்று முதல் வெளியாகி வருகின்றது.

படத்தின் கிளைமாக்ஸ் கவுதம் மேனன் பாணியில் இருக்கின்றது என்றும், தன்னுடைய படத்திற்கு இந்த கிளைமாக்ஸ் சரியாக இருக்காது என்று அஜீத் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் கவுதம் மேனன் தரப்பில் இந்த கதைக்கு இதுதான் சரியான கிளைமாக்ஸ் என்றும், வாதிட்டதாக கூறப்படுகிறது.

இந்த கருத்து வேறுபாடு காரணமாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்தும் முயற்சியில் இருக்கின்றார்.

இதுகுறித்து படக்குழுவினர் கூறும்ப்போது வேட்டையாடு விளையாடு மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா படம் போல நெகட்டிவ் கிளைமாக்ஸை கவுதம் மேனன் முடிவு செய்திருப்பதாகவும், இந்த கிளைமாக்ஸில் அஜீத்துக்கு உடன்பாடு இல்லாததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மைதான் என்றும் கூறி வருகின்றனர். இவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதே தவறு என்கிற ரீதியில் அஜீத் நினைப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தி தற்போது டுவிட்டரில் மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து கவுதம் மேனன் தரப்பிடம் இருந்தோ அல்லது அஜீத் தரப்பிடம் இருந்தோ எந்தவித பதிலும் வராததால், இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்றும் தெரியவில்லை.

Leave a Reply