பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் 55 என்ற படத்தில் நடித்து வரும் அஜீத், தற்போது அடுத்த படம் குறித்த வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த படத்தை இயக்கும் பொறுப்பை சிறுத்தை சிவாவுக்கு அஜீத் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இந்த படத்தை லிங்குசாமி தயாரிக்க விரும்புவதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தை லிங்குசாமி மற்றும் சிறுத்தை சிவா இடையே நடைபெற்ரு வருவதாகவும் ஒருசில இணையதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த செய்தி தனது கவனத்திற்கு வந்தவுடன் சிறுத்தை சிவாவுடன் தொடர்பு கொண்டு அஜீத் பேசியதாக கூறப்படுகிறது. கவுதம் மேனனின் நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு பின்னர் அவர் சூர்யா நடிப்பில் துருவ நட்சத்திரம் என்ற படத்தை இயக்கவிருந்தபோது திடீரென லிங்குசாமி இடையில் புகுந்து சூர்யாவின் மனதை மாற்றி தனது படத்திற்கு சூர்யாவிடம் கால்ஷீட் வாங்கிவிட்டார். இதனால் கவுதம் மேனன் மனதளவில் மிகவும் பாதிப்படைந்து இருந்த நிலையில் அஜீத் அவருக்கு கால்ஷீட் கொடுத்து கைதூக்கிவிட்டார்.
எனவே லிங்குசாமியும் சூர்யாவும் தனக்கு துரோகம் செய்து விட்டதாக கவுதம் மேனன் கூறி வருவதாகவும், இதன் காரணமாக லீங்குசாமியின் தயாரிப்பில் அடுத்த படம் வேண்டாம் என சிறுத்தை சிவாவிடம் அஜீத் கூறியதாகவும் இன்றுமுதல் கோலிவுட்டில் செய்திகள் பரவி வருகின்றது. அதுமட்டுமின்றி லிங்குசாமியுடன் இணைந்து அஜீத் நடித்த ‘ஜி’ திரைப்படம் அஜீத்தின் மிகப்பெரிய தோல்வி படமாக அவருக்கு அமைந்தது. எனவே மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற அஜீத் விரும்பவில்லை என்று அவருடைய வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
ஆனால் அஜீத் இன்னும் அடுத்த படம் குறித்து முடிவு செய்யவில்லை என்றும் ஷாலினியின் இரண்டாவது பிரசவத்திற்கு பின்னர்தான் அடுத்த படம் குறித்த முடிவை அவர் தெரிவிப்பார் என்றும் ஒருசிலர் கூறுகின்றனர். தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகள் எதுவுமே அதிகாரபூர்வமானது இல்லை என்பது மட்டும் அஜீத் ரசிகர்களுக்கு இப்போது புரிய ஆரம்பித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.