இனிமேல் என் பெயரை பயன்படுத்தாதே? சிம்புவுக்கு அஜீத் போட்ட கண்டிஷன்?
பல தடங்கல்களுக்கு பின்னர் சிம்பு நடித்த ‘வாலு’ படம் சமீபத்தில் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தால் டி.ராஜேந்தருக்கு நல்ல லாபம் என்று கூறப்படுகிறது. இந்த ஒரே படத்தால் அவரது பொருளாதார நிலைமை சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கெல்லாம் ஒரே காரணம் விஜய்தான் என்று வருபவர் போவர்களிடம் எல்லாம் சொல்லி விஜய்யை வாழ்த்தி வருகிறாராம்.
‘வாலு’ விஷயத்தில் விஜய் தானாக முன்வந்து அக்கறை எடுத்து படத்தின் ரிலீஸுக்கு முந்திய நாள் வரை தனது பி.ஆர்.ஓவை டிராஜேந்தருடன் இருக்க வைத்து பேருதவி செய்த விஜய்யை சிம்பு குடும்பத்தினர்கள் மறக்கவே மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு நேர்மாறாக இருக்கின்றது அஜீத் பக்கம்.
சிம்புவின் படம் வெளிவந்ததிலும், சிம்புவின் வெற்றியிலும் அஜீத்துக்கு எந்தவித பொறாமையும் இல்லை. ஆனால் டி.ராஜேந்தரின் பேச்சு அவரை மனதளவில் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. விஜய் ஒரு தமிழன், சிம்பு ஒரு தமிழன். ஒரு தமிழனுக்கு இன்னொரு தமிழன் தான் உதவி செய்வார் என்கிற ரீதியில் பேசியதை அஜீத் ரசிக்கவில்லையாம். மேலும் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் அஜீத் மலையாளி அதனால்தான் சிம்புவுக்கு உதவவில்லை, விஜய் தமிழன், அதனால்தான் சிம்புவுக்கு உதவியுள்ளார் என்ற ரீதியில் பலர் தெரிவித்த கருத்துக்களும் அஜீத்தின் மனதை புண்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் சிம்பு மீது அஜீத் ஆத்திரமாக இருப்பதாகவும், இனிமேல் தன்னுடைய படத்தையோ, பெயரையோ சிம்பு தன்னுடைய படத்தில் பயன்படுத்த கூடாது என்றும் கண்டிப்பாக கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.