shadow

samanthaதமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை சமந்தா, சமீபத்தில் தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு அளீத்த பேட்டியில் பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும்போது பெருமையாகவும், அதிக பணமும் கிடைத்தாலும், அந்த படங்களில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும், அப்படியே முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் எடுக்கப்பட்டாலும், எடிட்டிங்கில் அவர்களது காட்சி வெட்டப்படுவதாகவும் தனது மனக்குறையை தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

இனிமேல் தான் நடிக்கவிருக்கும் படத்தில் பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என்று வேறுபாடு பார்க்காமல் தன்னுடைய கேரக்டர் வெயிட்டாக இருக்கின்றதா? என்பதை மட்டும் பார்க்க உள்ளதாக கூறியுள்ளாராம்.

சமீபத்தில் விஜய் -சமந்தா நடிப்பில் வெளியான கத்தி படத்தில் சமந்தாவின் பல காட்சிகள் படத்தின் நீளம் கருதி வெட்டப்பட்டதை மறைமுகமாக சுட்டிக்காட்டவே இந்த பேட்டியை அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்திலும் அனுஷ்காவின் காட்சிகள் மட்டுமே படத்தின் நீளத்தை குறைக்க வெட்டப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் சமந்தா தனது நட்பு வட்டாரங்களில் அஜீத், விஜய் இருவருடைய படங்களிலும் இனி நடிப்பதில்லை என்றும், அவர்களுடைய படங்களில் நடிப்பது வேஸ்ட் என்றும் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் சமந்தா தரப்பில் இருந்து இந்த செய்தி மறுக்கப்பட்டுள்ளது. அஜீத், விஜய் குறித்து சமந்தா எவ்வித கருத்துக்களையும் தவறாக கூறவில்லை என்று விளக்கமளித்துள்ளதாகவும் ஒருசில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Leave a Reply