ஜெயலலிதாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த பல்கேரியாவில் இருந்து வந்த அஜித்
அஜித் எந்த அளவுக்கு மனித நேயம் மிக்கவர் என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் தேவையில்லை. புரட்சி தலைவி ஜெயலலிதா மரணம் அடைந்த செய்தி கேட்ட அஜித் உடனே இரங்கல் அறிக்கையை வெளியிட்டதோடு, உடனடியாக படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு பல்கேரியாவில் இருந்து நேற்று சென்னை கிளம்பியுள்ளார்.
நள்ளிரவு சென்னை வந்த அஜித், தனது மனைவி ஷாலினியுடன் ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். ரத்த சொந்தங்களே வெளிநாட்டில் இருந்தால் நீண்ட தூரம் பயணம் செய்து இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள தயங்கி வரும் இந்த காலத்தில் முதல்வர் மீது மிகுந்த அன்பும், பாசமும் வைத்துள்ள அஜித்தின் இந்த செய்கை ஆச்சரியப்படத்தக்கது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.