பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளதாக வடநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்தில் மும்பையில் நடந்த தேர்தலின்போது வாக்களிக்க வந்த ஐஸ்வர்யாராயை புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுத்தனர். அப்போது அவர் கர்ப்பம் உண்டானதுபோல் அவருடைய வயிறு பெரிதாக காணப்பட்டதாக செய்திகள் வெளியிட்டு உள்ளன. ஆனால் அமிதாப்பச்சன் குடும்பம் இதுவரை ஐஸ்வர்யாராய் இரண்டாவதாக கர்ப்பம் அடைந்ததாக உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில் தனது அடுத்த படத்தில் ஐஸ்வர்யாராயை ஒப்பந்தம் செய்திருந்த இயக்குனர் மணிரத்னம் இந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்து உள்ளார். தன்னை ஐஸ்வர்யாராய் ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார். இதற்கு முன் முதல்முறை கர்ப்பமானபோது பாலிவுட்டில் “ஹீரோயின்” என்ற படத்தில் நடிப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் அந்த படத்தில் இருந்து ஐஸ்வர்யாராய் விலகினார் என்பது தெரிந்ததே.
Leave a Reply
You must be logged in to post a comment.