அமிதாப் குடும்பம் அதிர்ச்சி

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும், அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது என்பது தெரிந்ததே

இருப்பினும் அபிதாப் பச்சன் குடும்பத்தில் மற்ற யாருக்கும் கொரோனா இல்லை என்றும் தகவல் வெளியானது. குறிப்பாக ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆராத்யா ஆகிய மூவருக்கும் கொரோனா நெகட்டிவ் தான் என்றும் முதல்கட்ட பரிசோதனை முடிவு தெரிவித்தது

ஆனாலும் அவர்கள் அனைவரும் கண்காணிப்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. ஆனாலும், ஸ்வாப் டெஸ்ட்டிற்கான முடிவு இன்னும் வரவில்லை எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர்களது மகள் ஆராதனாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டொப் தெரிவித்துள்ளார்.

இதனால், அமிதாப் குடும்பத்தில் இதுவரை 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply