மூன்று வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் மணிரத்னம் படம் மூலம் நடிக்க வருகிறார் ஐஸ்வர்யா ராய்.
நடிகை ஐஸ்வர்யாராய், உலக அழகியாகிய பின்னர் மணிரத்னம் இயக்கிய இருவர் படம் மூலம் அறிமுகம் ஆனார். பின்னர் அவரது இயக்கத்தில் குரு, ராவணன், போன்ற படங்களிலும், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், எந்திரன் போன்ற தமிழ் படங்களில் நடித்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக பல வருடங்கள் கொடிகட்டி பறந்தார்.
அதன்பின்னர் நடிகர் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக்கை திருமணம் செய்துகொண்டு கடந்த 2010ல் சினிமாவை விட்டு விலகினார். மகள் ஆரத்யா பிறந்த பிறகு பல இயக்குனர்கள் மீண்டும் நடிக்க அழைத்தபோதும் மகளுக்காக நடிப்பை தவிர்த்து வந்தார்.
தற்போது மகளுக்கு மூன்று வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார். சஞ்சய் லீலா பஞ்சாலி, மணிரத்னம் ஆகிய இருவரிடம் கதையை கேட்ட ஐஸ்வர்யாராய், மணிரத்னம் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக அவர் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.