ரஜினிகாந்த்தின் இளையமகள் இயக்கத்தில் வெளியான இந்திய திரையுலகின் முதல் மோஷன் கேப்ட்சர் திரைப்படமான கோச்சடையான் ரிலீஸாகி ஓரளவுக்கு வெற்றி பெற்றாலும், அந்த படம் குறித்த கருத்தை இதுவரை தனுஷ் மற்றும் செளந்தர்யாவின் சகோதரி கூறவில்லை., இந்நிலையில் வை ராஜா வை படத்தை இயக்கிவரும் ஐஸ்வர்யாவிடம் நிருபர்கள் கோச்சடையான் குறித்து கருத்துகேட்டபோது, அந்த படத்தை குறித்து அவர் சில கருத்துக்களை கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் எந்த கேரக்டரில் நடித்தால் அவருடைய நடிப்பு பிரமாதமாக இருக்கும். அவரை ஸ்கிரினில் பார்த்தாலே போதும் ஒரு எனர்ஜி வந்துவிடும். கோச்சடையான் திரைப்படமும் அதுபோலத்தான். ஆனால் மோஷன் கேப்ட்சரில் உருவானதால் அதில் சில தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். எதிர்காலத்தில் மோஷன் கேப்ட்சர் திரைப்படங்கள் எடுப்பவர்களுக்கு இந்த படம் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று கூறினார்.
கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்சி, விவேக் ஆகியோர் நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கிக்கொண்டிருக்கும் ‘வை ராஜா வை’ திரைப்படம் செப்டம்பர் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் அவர் கூறினார். இந்த படத்தின் இசை ‘3’ படம் போலவே வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அனிருத்தை இந்த படத்தில் பயன்படுத்தவில்லை என்றும், யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் பிரமாதமாக வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.