shadow

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் மேல்முறையீடு செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து மாறன் சகோதர்கள் உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய சிபிஐ ஆலோசனை செய்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய சிபிஐ, அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் சற்று முன்னர் அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் சிபிஐ மேல்முறையீடு செய்யதுள்ளது.

இந்த வழக்கு இன்று மதியம் 2 மணிக்கு விசாரணை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கின் முக்கிய தகவல் இன்று மாலை வெளிவரும் என தெரிகிறது.

Leave a Reply