சமூக வலைதளங்களில் வைரல்

துபாய் விமான துபாயில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் நேற்று விபத்துக்கு உள்ளான நிலையில் அந்த விமானத்தில் குடும்பத்துடன் பயணம் செய்த ஒருவரின் பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகி வருகிறது

மனைவி மற்றும் குழந்தையுடன் அவர் எடுத்த செல்பி புகைப்படத்தை பேஸ்புக்கில் விமானம் கிளம்புவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் விமானம் நேற்று கோழிக்கோடு விமான நிலையத்தில் தரை இறங்கிய போது திடீரென விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் அந்த நபர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது மனைவி மற்றும் குழந்தை உயிர் பிழைத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் அந்த பயணியின் குடும்பத்தினர் தற்போது கோழிக்கோடு விமான நிலையத்தில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் தெரியாமல் தவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

Leave a Reply