ஜெயலலிதாவுக்கு சிகிச்சை: எய்ம்ஸ் அறிக்கை
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் அணியினர் உள்பட கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பொதுமக்களுக்கு சரியான தகவலை தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, தமிழக அரசிடம் எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழு தமிழக அரசிடம் 5 அறிக்கைகளை அளித்தது . தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் எய்ம்ஸ் மருத்துவமனை துணை இயக்குநர் வி.ஸ்ரீனிவாஸ் அறிக்கையை அளித்தார்.
இந்த அறிக்கையில் உள்ள விபரங்கள் ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.