shadow

சென்னை விரைந்த எய்ம்ஸ் டாக்டர்கள். மீண்டும் வருவாரா லண்டன் டாக்டர்?

1தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை செய்து வருகின்றனர். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் அவர்களின் அறிவுரையின்படி முதல்வருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கூடுதல் சிகிச்சை அளிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கில்நானி தலைமையில் மருத்துவக் குழு ஒன்று சென்னை விரைந்து வந்து கொண்டிருப்பதாக மத்திய சுகாரத்துரை அமைச்சர் நட்டா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சற்று முன்னர் இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியபோது, ‘தமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. எய்ம்ஸ் மருத்துவர் கில்நானி தலைமையில் மருத்துவக் குழு ஒன்று சென்னை விரைந்துள்ளது. ஜெயலலிதா விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன். எய்ம்ஸ் மருத்துவர்களுடன் இணைந்து அப்பல்லோ ,மருத்துவர்களும் சிகிச்சை அளிப்பார்கள்” என்று கூறியுள்ளார். இந்நிலையில் தேவைப்பட்டால் மீண்டும் லண்டன் டாக்டர் ரிச்சர்டு சென்னை வர வாய்ப்பு இருப்பதாக அப்பல்லொ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply