நள்ளிரவில் டிடிவி தினகரன் கைது. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்
அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இல்லை சின்னத்தை குறுக்கு வழியில் பெற கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் அளித்ததாக கூறப்படும் புகாரில், டிடிவி தினகரனை டெல்லி போலீசார் நேற்று நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம் டெல்லியில் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அவரிடம் டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில் இந்த பணம் டிடிவி தினகரனிடம் இருந்து பெற்ற லஞ்சம் என்பது அவரது வாக்குமூலத்தில் இருந்து உறுதி செய்யப்பட்டதால் தினகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன்பேரில் தினகரனுக்கு முறையாக சம்மன் அனுப்பப்பட்டு கடந்த நான்கு நாட்களில் மொத்தமாக 37 மணிநேரம் தினகரனிடம் டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் அவருக்கு எதிரான குற்றத்திற்கு தகுந்த ஆதாரங்கள் இருந்ததன் அடிப்படையில் நேற்று நள்ளிரவு அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் அவருடைய நண்பர் மல்லிகார்ஜுனாவையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இருவரும் இன்று மதியம் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்
Leave a Reply
You must be logged in to post a comment.