shadow

அதிமுக பொதுக்குழு கூடியது. ஜெயலலிதா மறைவு உள்ளிட்ட 14 தீர்மானங்கள்

பெரும் பரபரப்புக்கு இடையே சற்று முன்னர் அதிமுக பொதுக்குழு கூடியது. இந்த கூட்டத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சசிகலா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்தார். இதன் பின்னர் வரிசையாக 14 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. அவற்றில் ஒன்று சசிகலா தலைமையில் பணியாற்ற உறுதிமொழி ஏற்றும் தீர்மானமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

முதல்முறையாக அதிமுக வரலாற்றில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், பொன்னையன் பண்ருட்டி ராமச்சந்திரன் மேடையில் உள்ளனர். மேலும் தம்பிதுரை, எடப்பாடி பழனிச்சாமி, அன்வர் ராஜா, சரோஜா உட்பட 45 பேர் மேடையில் உள்ளனர்

Leave a Reply