shadow

swetha basu and divyasriகடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு விபச்சார வழக்கில் சிக்கி கைதானதை தொடர்ந்து அவரிடம் நடத்திய ரகசிய விசாரணையின் விளைவாக நேற்று ஒரு நடிகை விபச்சாரம் செய்யும்போது கையும் களவுமாக பிடித்து போலீசார் கைது செய்தனர். இதுபோல் இன்னும் பல முன்னணி நடிகைகளை போலீஸார் குறி வைத்துள்ளதால் தெலுங்கு திரையுலக நடிகைகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

விபச்சார வழக்கில் சிக்கி கைதான ஸ்வேதா பாசு, எந்தெந்த நடிகைகள் தன்னுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற புள்ளிவிபர பட்டியலை போலீஸாரிடம் ரகசிய விசாரணையின்போது தெரிவித்துவிட்டதாகவும், அந்த விவரங்களை வைத்து போலீசார் வேட்டையாடி வருவதாகவும், பிரபல தெலுங்கு இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. போலீஸாரின் வேட்டையில் நேற்று பிடெக் பாபு என்ற படத்தில் நடிகை நடிகை திவ்யஸ்ரீ விபச்சாரம் செய்த போது கையும் களவுமாக பிடிபட்டார். அவருடன் பவன்குமார், சாந்து ஆகிய இரண்டு தெலுங்கு நடிகர்களும் கைதானார்கள்.

இந்த வேட்டை இதோடு முடிவடைந்துவிடவில்லை என்றும், விபச்சார வேட்டை தொடரும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளதால் நடிகைகளின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வேதா பாசு கொடுத்த லிஸ்ட்டின் அடிப்படையில் ஒவ்வொரு நடிகையையும் போலிஸார் ரகசியமாக பின் தொடர்ந்து வருவதாகவும், எந்த நேரத்திலும் பெரிய நடிகைகளும் இதில் சிக்க வாய்ப்பு இருப்பதாகவும், காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply