ரஜினியை அடுத்து ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ்?
சூப்பர் ஸ்டார் ரஜினியை தொடர்ச்சியாக ‘கபாலி’ மற்றும் ‘காலா’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித், அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
காலா படத்தை இயக்கியபோது ரஞ்சித்தின் இயக்கமும் ஒருங்கிணைப்பும் பிடித்து போனதால் தனக்கும் ஒரு கதை தயார் செய்யுமாறு கேட்டிருக்கிறாராம். இரஞ்சித்துக்காக நீண்ட காலமாக சூர்யாவும் காத்திருக்கிறார்.
அடுத்தடுத்து ரஜினி படம் இயக்கியதால் சூர்யாவை காத்திருக்க வைத்திருந்தார் இரஞ்சித். எனவே அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கிவிட்டு பின்னர் தனுசை வைத்து இயக்கலாம். காலா வெளியீட்டிற்கு பின்னர் தான் இது உறுதிபடுத்தப்படும்.
அனேகமாக இரஞ்சித் தனுஷ் இணையும் படமும் அரசியல் படமாகவே இருக்கலாம். தனுஷ் ஏற்கனவே கொடி என்ற அரசியல் படத்தில் நடித்தாலும் சமூகம் சார்ந்த படங்களில் அதிகம் நடித்ததில்லை. எனவே இரஞ்சித்திடம் அவர் பாணியிலேயே கதை தயார் செய்ய சொல்லியிருக்கிறாராம்.
Leave a Reply
You must be logged in to post a comment.