‘கபாலி’யை அடுத்து சூர்யாவை இயக்கும் பா.ரஞ்சித்
‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்கியதால் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம்பெற்றுவிட்டார். எனவே அவரது இயக்கத்தில் நடிக்க தற்போது பெரிய நடிகர்களே விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினியை அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை ரஞ்சித் இயக்கவுள்ளார். இந்த தகவலை அவர் ‘கபாலி’ தெலுங்கு ஆடியோ ரிலீஸ் விழாவில் நேற்று அறிவித்துள்ளார். ‘சிங்கம் 2’ படத்திற்கு பின்னர் சூர்யாவின் படம் எதுவுமே சூப்பர் ஹிட் ஆகாத நிலையில் தற்போது அவருக்கும் ஒரு சூப்பர் ஹிட் தேவைப்படுகிறது. சூர்யாவின் தேவையை ரஞ்சித் நிறைவேற்றி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சூர்யா நடித்து வரும் ‘சிங்கம் 3’ திரைப்படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. வரும் ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும். அதன்பின்னர் ரஞ்சித்தின் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்றும் இந்த படமும் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.