shadow

ஜனாதிபதி சந்திப்பை அடுத்து சோனியா-ராகுலை சந்திக்கிறார் ஸ்டாலின்

கடந்த வாரம் சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் ஏற்பட்ட ஜனநாயக படுகொலை குறித்து நேற்றிரவு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களை சந்தித்து முறையிட்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோர்களை சந்திக்கவுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை ஏற்காமல் சபைக்காவலர்கள் மற்றும் போலீசார் மூலம் தாங்கள் வெளியேற்றப்பட்டதாகவும், எனவே மீண்டும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் முறையிட்ட ஸ்டாலின், ஜனாதிபதிக்கு இந்த விஷயம் குறித்து வலியுறுத்துமாறு அவர் காங்கிரஸ் தலைவர்களிடமும் கேட்டுக்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கவர்னரிடம் இருந்து அறிக்கையை பெற்றுள்ள ஜனாதிபதி, ஸ்டாலின் அவர்களின் சந்திப்பை அடுத்து தமிழக சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவார் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றனர்.,

Leave a Reply