shadow

arvind kejriwalபாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துவிட்டதாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ள்ளார்.

வாரணாசியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “நாட்டில் நரேந்திரமோடி அலை பரவி வருவது உண்மைதான் என்றும், ஆனால் ஆம் ஆத்மி அந்த அலையை தடுத்து நிறுத்தும் என்று கூறினார். வேறு தொகுதியில் நின்று தன்னால் மிக எளிதாக வெற்றி பெற முடியும் என்றும், ஆனால் நரேந்திர மோடிக்கு நெருக்கடி கொடுக்கவே அவருடன் நேருக்கு நேர் மோத முடிவெடுத்துள்ளதாக கூறினார்.

மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்த சில நிமிடங்களில் அவர் சென்ற வாகனம் மீது அழுகிய முட்டை வீசப்பட்டது. மேலும் பலர் அவருக்கு கருப்புக்கொடி காட்டினர். அரவிந்த் கெஜ்ரிவால் மீது கருப்பு மையை ஒருசிலர் தெளித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

[embedplusvideo height=”400″ width=”650″ editlink=”//bit.ly/1dMjeOj” standard=”//www.youtube.com/v/n57XkRX49dY?fs=1″ vars=”ytid=n57XkRX49dY&width=650&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep4633″ /]

Leave a Reply