shadow

Car-Rapeடெல்லியில் சமீபத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று சூளுரைத்தார். ஆனால் அவர் பதவியேற்றபின்னர் டெல்லியில் ஓடும் காரில் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் மர்ம கும்பல் ஒன்றினால் டெல்லி கிழக்கில் உள்ள சில்லா எல்லை பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் அந்த பெண் காரில் இருந்து தள்ளிவிடப்பட்டார். இந்த கொடூரை செயலை செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக டெல்லியில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் பட்டப்பகலில் ஆப்பிரிக்க பெண் பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உடனடியாக உத்தரவிடும்படி மாநில உள்துறை அமைச்சகத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக டெல்லி போலீசிடம் இருந்து அறிக்கை ஒன்றை கேட்டுப் பெறவும் மாநில அரசு முடிவு செய்து உள்ளது.

Leave a Reply