ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் மனைவிக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையையும், மனைவியையும் ஆப்கன் அதிபர் ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாய் நேரில் வந்து பார்த்துவிட்டு அதன் பிறகு தனது இலங்கை சுற்றுப்பயணத்தை தொடர்ந்தார்.
ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாய் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது உயர் சிகிச்சை தேவைப்பட்டதால உடனடியாக இந்தியாவுக்கு செல்லுமாறு ஆப்கன் மருத்துவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில், அவர் இந்தியாவின் குர்கான் பகுதியில் உள்ள போர்டிஸ் மெமோரியல் ஆய்வு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அழகிய பெண் குழந்தை பிறந்ததாகவும், குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தகவல்களை ஆப்கனின் இந்தியத் தூதரான ஷைதா முகமது அப்தலி தாயும், உறுதிப்படுத்தியுள்ளார். சுகப்பிரசவன் ஆனதால் ஆப்கன் அதிபரின் மனைவியும் குழந்தையும் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.