பொன் மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: வழக்கறிஞர் பேட்டி
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக சென்னை ஐகோர்ட்டால் நியமனம் செய்யப்பட்ட பொன்மானிக்கவேல் பதவிக்காலம் முடிந்து விட்ட நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க முடியாது என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை அடுத்து பொன்மானிக்கவேல் ஆவணங்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது
இந்தநிலையில் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை, இன்று மாலைக்குள் ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி டெல்லியில் பேட்டி அளித்துள்ளார்.
பதவியில் இல்லாத பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை அரசிடம் கொடுக்காமல் வைத்திருப்பது சட்டவிரோதம் என்றும் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.