shadow

ஆட்சியை கலைத்து தேர்தல் நடந்தால் அதிமுக தான் ஜெயிக்கும். திருமாவளவன்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதால் அந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகல் கவர்னரிடம் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஆட்சி கலைப்பு ஏற்பட்டு தேர்தல் வந்தால், அது திமுகவுக்குதான் சாதகமாக முடியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படும் திருமாவளவன், திமுக வெற்றி பெறாது என்று கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நடந்தால் பாஜக+அதிமுக கூட்டணி, இரட்டை இலை, மத்திய அரசின் தாராள திட்டம், பணமழை ஆகியவை இந்த கூட்டணியை வெற்றி பெற வைக்கும் என்பதே அரசியல் விமர்சகர்களின் யூகமாக உள்ளது.

Leave a Reply