shadow

இன்று நண்பகல் 12 மணிக்கு அதிமுக அணிகள் இணைப்பு

அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் கடந்த வெள்ளி அன்றே இணையும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென இணைப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாரபூர்வமாக இரு அணிகளும் இணையவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறும் அதிமுகவின் சிறப்பு கூட்டத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொள்வார் என்றும் அந்த சமயத்தில் இரு அணிகளின் இணைப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இரு அணிகளின் இணைப்புக்கு பின்னர் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்பதை குறிக்கும் வகையில் பொதுச்செயலாளர் பதவியே நீக்கப்படும் என்ற முடிவை எடுக்கவுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

 

 

 

 

Leave a Reply