shadow

நல்ல செய்தி வந்து கொண்டே இருக்கின்றது. விரைவில் நல்லது நடக்கும். தம்பித்துரை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் சசிகலா குடும்பத்தினர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்ததால் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி இரண்டாக அதிமுக பிரிந்தது. தற்போது சசிகலா அணியில் இருந்து சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ஓரங்கட்டப்பட்டதால் மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுகவிற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கவுள்ளன.

இந்நிலையில் பேச்சுவார்த்தைக்காக இரு குழுவில் இருந்தும் ஏழு பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் நாளை மறுநாள் முதல் பேச்சுவார்த்தையை தொடங்கும் என்றும், அதன்பின்னர் ஓபிஎஸ்-ஈபிஎஸ் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, ‘அதிமுக தொண்டர்கள், மக்களின் உணர்வு, எண்ணம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. நல்ல செய்தி வந்து கொண்டிருக்கிறது என்றும், விரைவில் நல்லதே நடக்கும் என்று கூறினார்

Leave a Reply