shadow

ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. ஓபிஎஸ்-க்கு புதிய பதவி

அதிமுக தொண்டர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு இணங்க சற்று முன் அதிமுகவின் இரு அணிகளாக செயல்பட்டு கொண்டிருந்த ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி ஒரே அணியாக ஒன்றுபட்ட அதிமுகவாக இணைந்தது.

சற்று முன் அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கிக்கொண்டனர். பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த இணைப்பு நிகழ்ந்ததாகவும், இந்த இணைப்பிற்கு ஒத்துழைப்பு கொடுத்த பன்னீர்செல்வத்திற்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

இந்த நிலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் செயல்படுவார் என்றும், துணை ஒருங்கிணைப்பாளராக கேபி முனுசாமி செயல்படுவார் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பினை அடுத்து புதிய அமைச்சர்கள் இன்று மாலை 4.30 மணிக்கு பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஓபிஎஸ் மற்றும் மாபா பாண்டியராஜன் அமைச்சர்களாக பணியாற்றுவார்கள் என தெரிகிறது

Leave a Reply