shadow

rajyasabhaபாராளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த திமுகவின் செல்வகணபதி, சுடுகாட்டு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு நீதிமன்ற திர்ப்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதனால் செல்வகணபதி, தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். காலியான அந்த எம்.பி பதவிக்கு வரும் ஜூலை 3 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இன்று அறிவித்துள்ளார்.

இந்த எம்.பி பதவிக்கு அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஏ.நவநீதகிருஷ்ணன் போட்டிடுவார் என அதிமுக பொதுச்செயலாளர் இன்று வெளீயிட்டுள்ள ஒரு அறிக்கையில்  அறிவித்துள்ளார்.

1981 ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக சேவை செய்து வந்துள்ள நவநீதகிருஷ்ணன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராகவும் செயல்பட்டிருக்கிறார். மேலும்,  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நவநீதகிருஷ்ணன் தற்போது செயல்பட்டு வருகிறார்.

Leave a Reply