நாளை பாராளுமன்றம் கூடுகிறது. அதிமுக எம்.பிக்கள் முதல்வருடன் ஆலோசனை
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த 15ஆம் தேதி அதாவது, 11 நாட்களுக்கு பின்னர் மீண்டும் இன்று காலை தலைமைச் செயலகத்திற்கு ஜெயலலிதா வந்தார். இதைத் தொடர்ந்து அரசின் நலத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை மானியக் கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்திலேயே அதிமுக எம்பிக்களுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். நாளை கூடவுள்ள பாராளுமன்ற கூட்டத்தின்போது அதிமுகவினர் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.