அதிமுக எம்.எல்.ஏவை தனிமைப்படுத்தி கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்
முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுமான மணிகண்டன் அவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அறிவுறுத்தியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ராமநாதபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மணிகண்டன் அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்த கீழக்கரையை சேர்ந்த 71வயது நபர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார். இதன் காரணத்தினால் அவர் தன்னை சில நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையேற்று ராமநாதபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மணிகண்டன் இன்று முதல் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.