shadow

கமல் கோடியில் ஒருவர் அல்ல, தெருக்கோடியில் உள்ளவர்: அமைச்சர் ஜெயகுமார்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும், அமைச்சர் ஜெயகுமாரும் அவ்வப்போது கருத்து மோதல்களில் ஈடுபடுவதுண்டு. இந்த மோதல் இன்றும் நடந்துள்ளது.

சமீபத்தில் பேட்டியளித்த கமல், ‘தான் கோடியில் ஒருவன் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தனக்கு பிஆர்ஓ என்றும் கூறியிருந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், ‘கமல் தன்னை கோடியில் ஒருவன் என்று கூறியுள்ளார். அவர் தெரு கோடியில் மட்டுமே ஒருவராக இருக்க முடியும். அவர் என்னை பிஆர்ஓ என்று சொன்னதில் எனக்கு மகிழ்ச்சியே. பிஆர்ஓ என்றால் சும்மாவா. அது மிகப்பெரிய பொறுப்பு. நான் அவர் புகழை பரப்பிக்கொண்டு இருப்பேன்’ என்று கூறினார்.

ஜெயகுமாரின் இந்த கருத்துக்கு கமல் ரசிகர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களும் டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே பலமுறை இருவரும் செய்தியாளர்களுக்குக் அளிக்கும் பேட்டிகளில் ஒருவரை ஒருவர் காரசாரமாக விமர்சித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply