shadow

இணைப்பு மீண்டும் தாமதம். தலைமை அலுவலக சந்திப்பு ரத்து

அதிமுகவின் இரண்டு அணிகள் இன்று இணையும் என்றும் இன்னும் சில நிமிடங்களில் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் இந்த செய்தியை அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சசிகலாவின் நீக்கம் குறித்த கருத்துவேறுபாடு காரணமாக இணைப்பு காலதாமதம் ஆகியதாகவும், சசிகலா நீக்கம் குறித்த தீர்மானம் கையில் கிடைத்தால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என்று ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதால் இணைப்பு நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply