shadow

4சென்னையிலிருந்து புதுடெல்லிக்கு ‘அம்மா எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் புதிய ரயில் போக்குவர்த்து தொடங்கவேண்டும் என மத்திய அரசை பெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று லோக்சபாவில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய கே.என்.ராமச்சந்திரன் “மும்பை நகரை போலவே சென்னைக்கும் புல்லட் ரயில் சேவையை தொடங்கவேண்டும் என்றும், தமிழக முதல்வரின் நீண்டநாள் கோரிக்கையான சென்னை எம்.ஆர்.டி.எஸ். பறக்கும் ரயில் போக்குவரத்தை, மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மேலும் பகவான் ஸ்ரீராமானுஜர் பிறந்த இடமான ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தாம்பரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கவேண்டும் என்று கூறினார்.. சென்னையிலிருந்து டெல்லிக்கு ‘அம்மா எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் புதிய ரயில் இயக்க வேண்டும்” என்றும் அவர் மத்திய ரயில்வே அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.

மற்றொரு அ.தி.மு.க. உறுப்பினர் சி.கோபால கிருஷ்ணன் (நீலகிரி) பேசும்போது, “சென்னை – மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்தே 24 பெட்டிகளுடன் புறப்படவேண்டும். சேரன் எக்ஸ்பிரஸ், கோவை – மங்களூர் எக்ஸ்பிரஸ், கோவை – திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ஆகியவை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்கப்படவேண்டும். மேட்டுப்பாளையம் – பெங்களூர் இடையே புதிய ரயிலை இயக்க வேண்டும்” என்றார்.

Leave a Reply