அஞ்சலக சேமிப்புகளுக்கும் ஆதார் அவசியம்: மத்திய அரசு
ரேசன் கார்டு, பாஸ்போர்ட், கேஸ் கனெக்சன், வங்கி கணக்குகள், மொபைல் எண், ரயில் டிக்கெட் முன்பதிவு, உள்பட பல விஷயங்களுக்கு ஆதார் எண் அவசியம் என்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அஞ்சலக சேமிப்பு கணக்கு உள்பட அனைத்து அஞ்சல் திட்டங்களுக்கும் ஆதார் எண் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அஞ்சலகங்களில் ஆரம்பிக்கப்படும் சேமிப்பு கணக்கு, கிசான் விகாஷ் பத்திரம், தேசிய சேமிப்பு பத்திரம், பப்ளிக் பிரோவிடண்ட் பண்ட் உள்பட அனைத்து திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியம் என்று அறிவித்துள்ள மத்திய அரசு, மேற்கண்ட திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் வரும் டிசம்பர் 31க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.