பிரபல பாலிவுட் நடிகையும் மற்றும் சமீபத்தில் தடை செய்யப்பட்ட ராஜஸ்தான் ராயக் ஐ.பி.எல் கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான ஷில்பா ஷெட்டி, நேற்று திருப்பதி திருமலைக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனம் முடிந்து கோவிலுக்கு எதிரே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்குவதிலும், செல்பி எடுப்பதிலும் மும்முரம் காட்டினர். அங்கு கூடியிருந்த பெண்கள் பலருடன் சிரித்த முகத்துடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்ட ஷில்பா ஷெட்டி, அவர்களிடம் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தார். பின்னர் அவரை பார்க்க கூட்டம் அதிகமாக கூடியதால், காவல்துறையினர்களின் அறிவுரைக்கு ஏற்ப அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
நடிகை ஷில்பா ஷெட்டி பல சூப்பர்ஹிட் பாலிவுட் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ என்ற படத்திலும் விஜய் நடித்த குஷி படத்திலும் நடித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.