கடந்த 1990-களில் தமிழ் சினிமாவில் விஜய், அஜீத், ரஜினிகாந்த், பிரபு, உள்பட பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட் திரையுலகை வெற்றிகரமாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், போஷ்பூரி ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து பேரும் புகழும் பெற்று விளங்கினார்.
நடிகை ரம்பா, புகழின் உச்சியில் இருந்தபோது கனடாவைச் சேர்ந்த தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை மணந்து கொண்டு கனடாவில் குடியேறினார். இவர்களுக்கு 2011ஆம் ஆண்டு லாண்யா என்ற அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
இதையடுத்து, ரம்பா சமீபத்தில் மீண்டும் கர்ப்பமானார். இன்று அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் கனடாவில் தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
முதல் குழந்தை பிறந்த பிறகு ரம்பா தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமானார். இதனால், கனடாவில் இருந்து சென்னை வந்து வாய்ப்புகள் தேடி வந்தார். ஆனால், சினிமா வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தொலைக்காட்சிகளில் நடைபெற்று வந்த நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது பெண் குழந்தை பிறந்த ரம்பாவுக்கு டுவிட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.