தவமாய் தவமிருந்து, சத்தம் போடாதே, பொகிஷம், மிருகம் போன்ற பல படங்களில் நடித்த நடிகை பத்மப்ரியாவின் திருமணம் நேற்று மும்பையில் நடைபெற்றது.
நடிகை பத்மபிரியாவுக்கும் குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின் என்ற எஞ்சினியருக்கும் மும்பையில் நேற்று வெகுவிமரிசையாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் யாரும் திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை.
மணமகன் ஜாஸ்மின் ஐ.ஐ.டி.யில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு நியூயார்க்கில் பணிபுரிகிறார். கடந்த வருடம் பத்மப்ரியா நியுயார்க் நகரத்திற்கு மேல் படிப்பு படிக்க சென்ற போது ஜாஸ்மினும் பத்மபிரியாவும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் காதலை இரு வீட்டு பெற்றோரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து இன்று திருமணம் செய்து கொண்டார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.