விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நமீதா, அதன்பின்னர் இங்கிலீஷ்காரன், சாணக்யா, ஆணை, கோவை பிரதர்ஸ், வியாபாரி, பில்லா, போன்ற பல படங்களில் நடித்து கடந்த 2010ஆம் ஆண்டுவரை பிசியான நடிகையாக இருந்தார்.
தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் நமீதா, ‘பார்வதி புறா’ என்ற கன்னட படத்தில் மட்டும் நடித்து வருகிறார். இதுதவிர கடை திறப்பு விழா, மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நமீதாவுக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நமீதாவிடம் கேட்டபோது, “நான் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கு எப்போது படவாய்ப்புகள் இல்லாமல் போகிறதோ அப்போது திருமணம் செய்து கொள்வேன் என்றார்.
நமீதா விரைவில் மும்பை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்வார் என்று செய்திகள் கசிந்து வருகின்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.