உப்புமா இணையதளங்கள் பொய்யாக திரித்து எழுதுகின்றனர். கஸ்தூரி
சமீபத்தில் மகளிர் தினத்தின்போது ஆங்கில பத்திரிகை ஒன்றுக்காக நடிகை கஸ்தூரி பேட்டியளித்தார். இந்த பேட்டியில் அவர் பல விஷயங்கள் நடிகைகள் குறித்து கூறியிருந்தார். ஆனால் ஒருசில இணையதளங்களில் அவர் கூறாத ஒரு விஷயத்தை செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திவிட்டன
பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக கூறப்படுவதில் உண்மை உள்ளது. இது கால காலமாக நடந்து வருவதாக கஸ்தூரி கூறியதாக கடந்த இரண்டு நாட்களாக பல இணையதளங்களில் செய்தி வெளிவந்துள்ளது.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி கூறியதாவது: ஒருசில உப்புமா இணையதளங்கள் நான் சொல்லவே இல்லாத, முற்றிலும் பொய்யான கற்பனையான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. வியாபார நோக்கத்திற்காக சில இணையதளங்கள் இவ்வாறு செய்தியை வெளியிடுகின்றன. நாட்டில் தீர்க்க வேண்டிய எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது அதைப்பற்றி எழுதாமல் இதுபோன்ற பொய்யான செய்தியை வெளியிட்டுள்ள இணையதளங்களுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்’ என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.