சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படம் தோல்வி என்றும், அதனால் தங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் வந்தததால் தங்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் நேற்று நடிகர் சங்கம் ரஜினிக்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.
ஒரு படம் வெற்றி அடைந்தால் அதன் லாபத்தை அனுபவிப்பது, தோல்வி அடைந்தால் அந்த படத்தில் நடித்த நடிகர் மீது பழி போடுவது என்ற வழக்கத்தை விநியோகிஸ்தர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டால் விநியோகிஸ்தர்கள் தயாரிப்பாளரைத்தான் அணுக வேண்டுமே தவிர நடிகர் மீது பழிபோடக்கூடாது என சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரஜினிக்கு நடிகர் சங்கம் தனது முழு ஆதரவை அளிக்கும் என கூறியுள்ளது. இந்நிலையில் தனது கத்தி படத்திற்கு பிரச்சனை வந்தபோது எவ்வித உதவியும் செய்ய முன்வராத நடிகர் சங்கம் ரஜினிக்கு மட்டும் அவர் கேட்காமலேயே ஆதரவு கொடுத்து வருவதாக விஜய் தரப்பு முணுமுணுத்து வருவதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.