shadow

எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என மூன்று தொடர் ஹிட் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் அடுத்து நான் நடித்துக்கொண்டிருப்பது ஒர் ஆக்சன் படம் என்று கூறியுள்ளார்.

தற்போது ஹன்சிகா ஜோடியாக அவர் நடித்துக்கொண்டிருக்கும் மான் கராத்தே என்ற படம் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தில் தான் முதன்முதலாக ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருப்பதாகவும் இதுவரை தன்னை மென்மையாக, காமெடியனாக பார்த்த ரசிகர்கள் இந்த படத்தின் மூலம் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக பார்ப்பார்கள் என்றும் கூறிய அவர், இந்த படத்தை தொடர்ந்து மேலும் இரண்டு ஆக்ஷன் படங்கள் நடிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயனோடு ஹன்சிகாவும் சேர்ந்து நடித்துள்ளதால் மான் கராத்தேவின் தமிழக உரிமை மட்டும் ரூ.20 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரூ.25 கோடி வசூலானதால் இந்த பட வசூல் அதைவிட அதிகமாக இருக்கும் என விநியோகிஸ்தர்கள் கருதுகின்றனர். மேலும் சிவகார்த்திகேயன் கோடிகளில் சம்பளம் பெறும் நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டதாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அடுத்ததாக தனுஷ் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க சிவகார்த்திகேயன் பேசி வருகிறார்.

Leave a Reply