shadow

18-face

* சிலருக்கு முகத்தில் பரு அல்லது மூக்கில் கரும் புள்ளி இருந்தால் அவர்கள் கிளன்சிங் செய்த பிறகு ஸ்கிரப்பை மூன்று நிமிடம் முகத்தில் தேய்த்துப் பின் கழுவி விடவும்.

* பாத்திரத்தில் தண்ணீர் உற்றி அதில் புதினா இலை இரண்டு, வேப்பிலை நான்கு, துளசி இலை நான்கு சேர்த்து நன்கு கொதித்த பின் முகத்தில் ஆவி பிடிக்கவும், இல்லை என்றால் அந்த நீரில் பருத்தியினால் ஆன மிருதுவான துண்டை நனைத்து, பிழிந்து முகத்தில் 2 நிமிடம் மூடிக் கொள்ளவும். பின் டிஸ்யூ தாள்களால் மூக்கை அழுத்தினால் கரும் புள்ளி வந்து விடும்           பின்டோனரைப் பஞ்சில் தோய்த்து முகத்தில் தடவவும்.

* முகத்துக்கு மாஸ்க் (முகமூடி) வேண்டுமானால் முக த்தில் முகப்பரு உள்ளவர்கள் முள்தானி மட்டியுடன் சிறிது எலுமிச்சைச்சாறு, ரோஸ்வாட்டர் (நீர்)கலந்து பஞ்சில் தோய்த்து, முகத்தில் தடவவும் இப்படித் தேய்த்து 10நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும் இவ்வாறு தொடர்ந்து செய்துவர முகப்பரு தொல்லை நீங்கும்.

* முகத்தில் முகப்பரு அற்றவர்களுக்கு, சந்தனப் பொடியுடன் ரோஸ்வாட்டர் சே ர்த்து, பருத்தித் துணியால் தோய்த்து இதை முகத்தில் தேய்த்தபின் 10நிமிடம் கழித்து, குளிர்ந்தநீரால் முகத்தைக் கழுவினால் முகத் தில் உள்ள அழுக்கு, கரும்புள்ளிபோகும். இதற்குப் பெயர்தான் ப்ளீச்சிங் ஆகும்.

Leave a Reply