shadow

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் ஆச்சார்யா

aacharyaசென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில், அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தாக்கல் செய்தார். இதனால் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 11ஆம் தேதி ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் கணக்கில் பிழை இருப்பதாக தமிழக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின. இதையடுத்து இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்ததை அடுத்து கடந்த சில நாட்களாக மேல்முறையீட்டு பணிகளை கவனித்து வந்த வழக்கறிஞர் ஆச்சார்யா இன்று இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

இந்த மேல் முறையீட்டு மனு எப்போது விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என்பது பின்னர் தெரியவரும். தேவைப்பட்டால் புதிய அமர்வு ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply