shadow

குற்றவாளியின் தாய் திடீர் கைது. அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்த வினோதம்

அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் சாலை விபத்து குறித்த வழக்கு ஒன்றின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அமெண்டா கோசல் என்ற இளம்பெண் போதையுடன் கார் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் ஒரு தம்பதி படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் கணவர் சிகிச்சைக்கு பலனளிக்காமல் மரணம் அடைந்துவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது நீதிமன்றத்தின் நடவடிக்கைகளையும், நீதிபதியையும் கிண்டல் செய்யும் வகையில் அமெண்டா கோசலின் தாய் கமெண்ட் செய்து கொண்டிருந்ததால் ஆத்திரம் அடைந்த நீதிபதி அமெண்டாவின் தாயை கைது செய்ய உத்தரவிட்டார்.

ஒரு வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது அந்த வழக்கின் தாயார் நீதிமன்றத்திலேயே கைது செய்யப்படுவது அமெரிக்க நீதிமன்ற வரலாற்றில் இதுதான் முதல்முறை என்று நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply